TamilsGuide

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கவனத்திற்கு

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன், க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்குட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள் என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment