TamilsGuide

ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியிடம் மஹிந்த கோரிக்கை

”ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற உண்மை தனக்குத் தெரியும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்தானது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை நாட்டு மக்களிடம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மைத்திரியிடம்  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட கண்டி வித்யார்த்த வித்தியாலய மைதானத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று தெரிந்தால், நீதிமன்ற உத்தரவு வரை காத்திருக்காமல் அவர்கள் யார் என்பதை மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a comment

Comment