TamilsGuide

மாணவிக்கு அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞன் - பஸ்ஸில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி 

பஸ்ஸில் மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞனை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

மாணவியொருவர் மாலை நேர வகுப்பை நிறைவு செய்துவிட்டு பலாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் ஏறி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த இளைஞன் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டியுள்ளார். இதனை அவதானித்த பஸ்ஸில் இருந்த சக பயணிகள் சிலர் இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞன், பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment