TamilsGuide

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்கின்றனர் - கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை பாடப்புத்தகங்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊவா மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்விச் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்றும், அப்போது தனியார் வகுப்புகளில் பங்கேற்பது குறையும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment