TamilsGuide

இணக்கமின்றி முடிவுக்கு வந்த பசில் – ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றிரவு விசேட (21) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாததால், எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment