TamilsGuide

3100 பட்டதாரிகள் தொடர்பில் அறிவிப்பு-மாகாண ஆளுநர் .வில்லி கமகே

தென் மாகாணத்தில் உள்ள 3100 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண ஆளுநர் .வில்லி கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த மாதம் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்

இதன்படி பிரதேச செயலக மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment