TamilsGuide

கர்ப்பிணித் தாய்மார்களின் கவனத்திற்கு

தற்போது நிலவிவரும் வெப்பமான கால நிலை காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து இருப்பதாக இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வெயிலில் பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குறைபிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்று கடந்த  2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் வெப்பமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் பணிபுரியும் 800 கர்ப்பிணிப் பெண்களைப் பயன்படுத்தி மேற்கொண்டு வரும் ஆய்விலேயே இவ் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆய்வில்  பெண்களில், 5 சதவீதமானோர் கருச்சிதைவுகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில், குறைமாத பிரசவம் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment