TamilsGuide

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது - உதய கம்மன்பில

சபாநாயகர் தொடர்பாகக் கொண்டிருந்த நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகர் அந்த பதவிக்கான கௌரவத்தை கருத்திற்கொண்டு பதவியில் இருந்து விலக வேண்டும்.

ஏனென்றால் சபாநாயகர் தொடர்பில் கொண்டிருந்த நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போயுள்ளது.

இணையவழிபாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் ஊடாக சபாநாயகர்அரசியலமைப்பை மீறியுள்ளார்.

எமது நாட்டின் அரசியலமைப்பில் சபாநாயகருக்குரிய கௌரவம் மற்றும் நம்பிக்கை தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில மேலும் தெரிவித்தார்.

Leave a comment

Comment