TamilsGuide

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி  தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024/25 ஆண்டுக்கான வரலாற்றில் முதல் தடவையாக சங்கத் தலைவரை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்றிருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.

இத் தேர்தலில்  ஐ.றைசுல் ஹாதி மற்றும் ஆரிப் சம்சுதீன்  போட்டியிட்ட நிலையில் ஐ.றைசுல் ஹாதி அதிகளவான வாக்குகளை பெற்று புதிய தலைவராகத்  தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment