TamilsGuide

வெடுக்குநாறி விவகாரம் - திருகோணமலையில் போராட்டம்

கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி  திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்பாக நேற்று கவனயீர்ப்புப்  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்த்தில் பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக வழிபாடு எமது அடிப்படை உரிமை, ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம், ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே, வழிபாட்டைத் தடுக்கும் உரிமையை பொலிஸாருக்குக்  கொடுத்தது யார்? போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
 

Leave a comment

Comment