TamilsGuide

ஓடும் ரெயிலின் மேற்கூரையில் நின்று சாகசம் செய்த வாலிபர்- வீடியோ

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சில வாலிபர்கள் பொது இடங்களில் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதில் சில வீடியோக்கள் விபரீதமாக உள்ளது. அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில், வங்காளதேசத்தில் ஒரு வாலிபர் ஓடும் ரெயிலில் மேற்கூரையில் நின்றவாறு சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரெயிலின் மேற்கூரையில் அந்த வாலிபர் ஆபத்தான முறையில் நிற்கிறார். அப்போது ரெயில் ஒரு சுரங்கபாதை வழியாக செல்கிறது. அந்த சுரங்கபாதையின் மேற்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக வாலிபர் குனிந்தும், நிமிர்ந்தும் செல்வது போன்று காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment