TamilsGuide

மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.175 கோடி வசூல் செய்து சாதனை

கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.

இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 3 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment