TamilsGuide

மன்னாரில் விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி, நேற்று மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு இந்த நிகழ்வின்போது விசேட தேவையுடையோருக்கான பல்வேறு போட்டிகள் இடம் பெற்றதோடு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
 

Leave a comment

Comment