TamilsGuide

கட்டுநாயக்க விமான நிலையம் - புதிய பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கத் தீர்மானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்ர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புதிய பயணிகள் முனையத்தில் 30 வெளியேறும் கருமபீடங்கள் நிறுவப்படவுள்ளது.  தற்போது காணப்படும் பயணிகள் முனையத்தில் போதுமான இடவசதி இன்மையால் புதிய பயணிகள் முனையத்தை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இதற்கான நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதற்காக உள்நாட்டு நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு ருவன்சந்ர தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment