TamilsGuide

கிளிநொச்சியில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகள்

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பிரச்சனை நீண்ட காலமாக காணப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன்,பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விடம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment