TamilsGuide

முல்லைத்தீவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு, அம்பகாமம், பழைய கண்டிவீதி பகுதியில் முதியவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பகாமத்தை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதியவரின் சடலம்  பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment