TamilsGuide

ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்துவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் நாளை 11ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளது.

குறித்த இருவருக்குமான தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியானதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வருடத்துக்கும் மேலாக இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இவர்கள் இருவரும் மடகாஸ்கரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment