TamilsGuide

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விபத்து

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இன்று (சனிக்கிழமை)  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது  கெப் ரக வாகனமொன்று மோதியதில்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே  இந்த கெப் ரக வாகனம் மோதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment