TamilsGuide

மட்டக்களப்பில் சங்குக் கடத்தலில் ஈடுபட்ட தேரர் கைது

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளைக்  கடத்தி வந்த தேரர் உட்பட இருவர் கல்குடாவில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள்  கல்குடா பொலிஸாரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் கல்குடா பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment