TamilsGuide

அம்பாறையில் சமாதான மாநாடு

கப்சோ அமைப்பினால் அப்பாறை மாவட்டத்தில் உள்ள மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் சமாதான மாநாடொன்று அண்மையில் நடத்தப்பட்டது.

இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே குறித்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

கப்சோவின் திட்டப்பணிப்பாளர் எ. ஜே காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் வரலாற்றில் முதல் முறையாக இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் சிறி வால்ட், ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கைக்கான தென்னபிரிக்க தூதுவர் சண்டில் எட்வின் ஸ்கல்க் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சமூகத்தலைவர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

Leave a comment

Comment