TamilsGuide

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க நீதிமன்றத்தில் முன்னிலை

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்து.

இந்நிலையில் குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காக தற்போது அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்டோர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment