TamilsGuide

மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டால் நவகமுவையில் பதற்றம்

நவகமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று (05) காலை, கட்டிட பொருட்கள் விற்பனை நிலையமொன்றுக்கு  முன்பாக இத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்  இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment