TamilsGuide

தேநீர் மற்றும் உணவுப்பொதியின் விலை மீண்டும் அதிகரிப்பு

தேநீர் மற்றும் உணவுப்பொதி ஆகியவற்றின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன

இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் தேநீர் தேநீர் மற்றும் ப்ரைய்ட் ரைஸ், கொத்துரொட்டி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

பால் தேநீரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் தேநீரின் விலை 5 ரூபாவினாலும் உணவுப்பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது

அத்துடன் ப்ரைய்ட் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவற்றின் விலைகள் 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

உணவுபொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
 

Leave a comment

Comment