TamilsGuide

பாணந்துறையில் பற்றியெறிந்த நிறப்பூச்சுத் தொழிற்சாலை

பாணந்துறையிலுள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் நேற்று பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இத்தீ விபத்து நேர்ந்துள்ளது.

இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும், தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து, மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான  காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment