TamilsGuide

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டமொன்றை நடத்திய 30 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமின் சாகோதரியின் கணவர் உள்ளிட்ட 5 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  கைதுசெய்யப்பட்டவர்கள் ஸஹ்ரான் ஹாசிமின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்,  விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment