TamilsGuide

யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரச பல்கலைக்கழகங்களில் இன்றும்,நாளையும்  பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப்  போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், இன்று யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment