TamilsGuide

ரொஷான் குமார படுகொலை - விரைவில் உண்மைகள் வெளிவரும்

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

படுகொலைசெய்யப்பட்ட ரொஷான் குமாரவின் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில்” ரொஷான் குமாரவை படுகொலை செய்தவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு  தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment