TamilsGuide

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் - அரசாங்கத்திடம் எரான் விக்ரமரத்ன கோரிக்கை

”ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்க காரணம் என்ன?” என்பதை விளக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அதேவேளை ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல்4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்தும்,  தெரிவுக்குழுவை நியமித்தமைக்கு விளக்கமளிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment