TamilsGuide

யாழ்.புத்தூர் பகுதியில் பற்றியெரிந்த வீடு

யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், குறிப்பாக  வீட்டின் உரிமையாளர் காணி வாங்குவதற்காக  சேர்த்து வைத்திருந்த 8,00,000 ரூபாய் பணமும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment