TamilsGuide

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மின்சார சபையால் கிடைக்கும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக  அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், இப்புதிய  திருத்தத்தில் முற்றாக நீக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment