TamilsGuide

தலைவர் பதவிகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குங்கள்

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு  வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்தின் போது சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவிகளை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும், இது தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment