TamilsGuide

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று இன்று காலை 9.30 மணியளவில்  மொழியல் ஆங்கிலத்துறை தலைவர் கவிதா நவகுலன் தலைமையில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது “தாய்மொழி பற்றிய கருத்தியல்” எனும் தலைப்பில் சிக்காக்கோ பல்கலைக்கழக பேராசிரியர் இ. அண்ணாமலை நிகழ்நிலையில் உரையாற்றினார்.

இந் நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

Leave a comment

Comment