TamilsGuide

தனியார் மயமாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த இயக்கம் தெரிவித்துள்ளது

இதேவேளை மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், ரயில்வே, வங்கிகள், விமான நிலையங்கள் மற்றும் பல முக்கிய பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment