TamilsGuide

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பில் தகவல்

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலைய கொள்கலன் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்க சுகாதார அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட ஸ்கேன் இயந்திரம் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் வைக்கப்பட வேண்டும் எனினும் விமான நிலைய களஞ்சியசாலைகளில் அவ்வாறான நிலை உள்ளதா என்பது கேள்விக்குறியே என சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் இயந்திரத்தின் செயற்பாடு பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் CT ஸ்கேன் இயந்திரம் 18 வருடங்கள் பழைமையானது எனவே குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment