TamilsGuide

இணுவில் புகையிரத விபத்து - போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து  அப்பகுதி மக்களால் நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டி அப்பிரதேச மக்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள், புகையிரதம் வந்தபோது அதனை மறித்து பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

குறித்த போராட்டத்தில்  சிவில் சமூக உறுப்பினர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விரைவில்  குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment