TamilsGuide

சிறிதரனுக்கும் ஜீவனுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

சிறீதரனின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து, ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளைத்  தெரிவித்து கொண்டார்.

அத்துடன் ”நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இருவருக்கும் இடையில்  கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment