TamilsGuide

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் இருந்து அடுத்தடுத்து இருவர் இராஜினாமா

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் இயக்குநர் பதவியில் இருந்து மேலும் இருவர் இன்று இராஜினாமா செய்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தனது பதவி விலகல் கடிதத்தினை இன்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் ”தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக சட்டத்தரணி என்ற வகையில் தான் பணியாற்றியதாகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும்” தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் இயக்குநர் பதவியில் இருந்து மேலும் இருவர் இன்று இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment