TamilsGuide

கொழும்பில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு

கொழும்பு – முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த  உணவகத்தில் முகாமையாளராக பணியாற்றிய 51 வயதான ஒருவரே இத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதுடன் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment