TamilsGuide

பலாலியில் காணி சுவீகரிப்பு முயற்சி – மக்களின் போராட்டத்தால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள் அப்பகுதி மக்களின் போராட்டத்தால் அடுத்து கைவிடப்பட்டது.

குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் இரகசியமாக நிலங்களை அளவிடும் முயற்சி இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை அறிந்து அப்பகுதியில் குவிந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது நிலங்களை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நில அளவையைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலும் 500 ஏக்கர் நிலத்தைச் சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்குத் கடும் எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ள போதும் அவர் வாய்மூடி மௌனமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 

Leave a comment

Comment