1947 ஆகஸ்ட் 15- முதல் சுதந்திர நாளன்று வானொலியில் பேச கலைவாணர் அழைக்கப் பட்டார். முன்கூட்டியே தான் பேச விருப்பதை எழுதிக் கொடுத்து விட்டார்.
நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரி சையில் தந்தைபெரியார் பெயரையும் இணைந்திருந்தார். அந்தப் பெயரை மட்டும் வானொலி நிலையத்தார் நீக்கிவிட்டனர்.
வானொலி நிலைய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த கலைவாணர், பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் - ஏன், பெரியார் நாட்டு விடுதலைக்காகப் பாடுபடவில்லையா? அவர் பெயர் இல்லை என்றால், நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராகக் கூறிவிட்டார்.
வேறு வழியில்லை. பெரியார் பெயரைச் சேர்த்த பின்பே நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த அளவுக்கு தந்தை பெரியார் மீது மரியாதை கொண்டிருந்தார். தந்தை பெரியார் கலைவாணர் மீது அன்பும் பாசமும் பொழிந்தார்.
இன்று உலக வானொலி தினம்