TamilsGuide

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்

புத்தளம் – ஆனமடுவ, தட்டேவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே துப்பாக்கிபிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் பிரயோகத்தில் காயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

மேலும் துப்பாக்கிச் பிரயோகம் நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன் தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment