TamilsGuide

மேற்கு அவுஸ்திரேலிய முதலமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி

மேற்கு அவுஸ்திரேலியாவின் முதலமைச்சர் றொஜர் குக் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்; இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள 07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment