TamilsGuide

விபத்தில் சிக்கியவர்களில் 76 பேர் உயிரிழப்பு- யாழ் போதனா தெரிவிப்பு

கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடந்த வருடம் விபத்துக்களில் சிக்கிய நிலையில்  1,559 பேர்  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறு இருப்பினும்  அவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment