TamilsGuide

கிளிநொச்சியில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து சாம்பலாகியுள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற இந்த அனர்த்ததில் 35 இலட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிற்கதியாக நிற்பதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment