TamilsGuide

பெண் வைத்தியரை பாலியல் பலத்காரம் செய்த ஆண் வைத்தியர் கைது

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் அதே வைத்தியசாலையில் கடமையாற்றிய சக ஆண் வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய வைத்தியர் பலவந்தமாக பாலியல் சீண்டலில் பெண் வைத்தியரிடம் நடந்து கொண்டதாக தந்தை கேகாலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதன்படி, சந்தேகநபர் இன்று (08) அரநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment

Comment