நடிகை நந்திதா அட்டகத்தி படத்தின் மூலமாக பாப்புலர் ஆனவர். அவர் அதன் பின் அவர் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
நந்திதா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் விரைவில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக கூறி இருக்கிறார்.
இதுவும் ஹாரர் தானா என செய்தியாளர்கள் கேட்க, நான் இனி ஹாரர் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இருப்பதாக கூறி இருக்கிறார்.