கனடாத் தமிழ்க்கல்லூரி மற்றும் அறிவகம் இணைந்து மிகப் பிரமாண்டமான முறையில் நடாத்திய தமிழர் மரபுத்திங்கள் விழா 2024 இல் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும்.!!!
உயர்தனிச் செம்மொழியாம் எங்கள் தாய்மொழியினைக் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் எங்களுக்கெல்லாம் வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் கனேடிய தேசத்திற்கு நன்றி.!!!
கனேடிய மண்ணில் தமிழ்மொழி ஆசிரியப் பணியிலே பத்து வருடங்களினைப் பூர்த்தி செய்தமையினைப் பாராட்டி அறிவகம் என்ற அறிவாலயம் விருது வழங்கிக் கௌரவித்த என் வாழ்நாளின் பொன்னான நேரமிது.!!! கனடாத்தமிழ்க் கல்லூரி மற்றும் அறிவகம் என்ற இரண்டு அறிவாலயங்களிற்கும் என் மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தினையும் மீண்டும் மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்.????
பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன்- தமிழ்நாடு அவர்களின் கரங்களால் இந்த விருது கிடைத்தமையும் என்றும் இனிமையான நினைவே.!!!
நாம் புலம்பெயர்ந்தாலும் எமது அன்னை மொழியினையும், எமது மொழிக்கு மாமணிமகுடங்களாகத் திகழும் இலக்கியங்களையும், எமது இனத்தின் மேன்மை மிகு பண்பாட்டினையும் அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்துச் செல்வதற்கு நல்வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் மீண்டும் என் மனப்பூர்வமான நன்றி.!!! இறையருளோடு இந்த உன்னத பணியினைத் தொடர்ந்தும் சிறப்புறச் செய்வோம்.!!!
அன்றையதினம் எட்டாம்வகுப்புத் தமிழ்மொழிக் கற்கையினை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்புவிழாவில் எங்கள் மகன் ஜெனுஸ் ஜெயக்குமார் அவர்களும் பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார்.!!! அன்றையதினம் தமிழ்மொழியிலே பட்டம்பெற்ற மாணவச் செல்வங்களிற்கும், விருதுபெற்ற சக ஆசான்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.!!!
வாழ்க தமிழ்.!!
நன்றியுடன்,
திருமதி. ஜோதி ஜெயக்குமார்