TamilsGuide

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் வேலணை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்காகப்  பயன்படுத்துவதே எனது வழக்கம். அதற்கிணங்க  சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிதியை மக்களின் அவசிய தேவைகளுக்கு பயன் படைத்துவதையே நான்  விரும்புகின்றேன். அத்துடன் அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இருக்க வேண்டும்” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment