TamilsGuide

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை)  உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை பிரதான நீதவான், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்

இவர் பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, பொதுமக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையிலான காணொளிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment