TamilsGuide

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய குழு நாட்டிற்கு வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் (APRC) 37 ஆவது அமர்வின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக குறித்த குழு வருகை தந்துள்ளது.

குறித்த மாநாடு பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதேவேளை உணவு மற்றும் விவசாயம் தொடர்பான சவால்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதும் பிராந்திய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதுமே ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டின் பிரதான நோக்கமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment